மீண்டும் நிலா
Episode – 15
Written by – Saipriya.A
இரவு முழுக்க விழித்து இருந்ததற்கு அடையாளமாக கண்கள் சிவந்து போயிருக்க…
அலாரம் அடித்ததும் நிறுத்திவிட்டு வெகுநேரம் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள் நிலா.
லக்ஷ்மியின், “பட்டு… இன்னும் என்னடா பண்ற…?” என்ற குரல் காதில் விழ…
மெதுவாக படுக்கையை விட்டு இறங்கியவள் யோசித்துக்கொண்டே அலுவலகம் கிளம்பினாள்…
இதுவரை ஒரு நாள் கூட எதற்கும் இப்படி யோசித்தது இல்லை…
அவனை பற்றி நான் யோசிக்கமாட்டேன் என்று மனதில் கூறிக்கொண்டாலும் அவள் மனம் சமாதானம் ஆகவில்லை…
யாருடனும் பேசாமல் கிளம்பியவள் சுமி வந்ததும் அலுவகலம் கிளம்ப…
லக்ஷ்மி, “என்ன நிலா உடம்பு சரியில்லயா…” என்று தொட்டுப்பார்க்க…
“அப்படியெல்லாம் இல்லயே அம்மா…” வலுக்கட்டாயமாக சிரித்துவிட்டு சுமியுடன் கிளம்பினாள்.
சுமி, “ஏன் நிலா… கண்ணெல்லாம் சிவந்து இருக்கு…?” என்று கேட்க.
நிலா, “நைட் மொபைல் பாத்துட்டு இருந்தேன் ரொம்ப நேரம்… அதனால அப்படி இருக்கும்” மழுப்பினாள்.
எனக்கு என்ன கோபம் அவன்மேல… அவன் யாரோ… நான் யாரோ…
ஒருவழியாக மனதை சமாதானப்படுத்த…
அது நேரம் பார்த்து பொங்கப்போகிறது என்று அவளுக்கு தெரியவில்லை…
வேலையில் கவனம் செலுத்த முயன்றால் தலைவலி தான் வந்தது…
காஃபி குடிக்கலாம் என்று நினைத்தாலும் இப்போ போனா அவன் இருப்பானோ…
யோசித்துக்கொண்டு ரகுவை அழைத்தாள்…
“ப்ரோ… எனக்கு காஃபி கொண்டு வரமுடியுமா… தலைவலிக்கற மாதிரி இருக்கு…” நிலா கேட்க.
“Sure நிலா…”
நிலாவை காணாமல் தவித்த ஆதி, ரகு கையில் இரண்டு கோப்பைகளுடன் வர…
“ஓ மேடம் அனுப்பி இருக்காங்க போல…” நினைத்தவன்…
“ரகு… உங்களை தான் தேடிட்டு இருந்தேன்… இந்த வீக் நம்ம டிப்பார்ட்மெண்ட் productivity பத்தி HR கேட்டார்… நீங்க போய் அது என்னனு பாருங்க…” ஆதி சொல்ல…
“ஓகே சர்… நிலா தலைவலிக்குதுனு காஃபி கேட்டாங்க… குடுத்துட்டு போறேனே…” ரகு சொல்ல…
“இல்ல… இட்ஸ் வெரி urgent… சோ நீங்க உடனே அங்க போங்க… நா அந்த பக்கம் தான் போறேன்… காஃபி நா கொடுத்துடறேன்…” என்ற ஆதி ரகுவின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் கையில் இருந்த கோப்பையை பிடுங்கிக்கொண்டான்.
ரகு ஆதி சொன்ன வேலையை பார்க்க செல்ல…
நிலாவின் கேபினுள் நுழைந்த ஆதி தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தவளை பார்த்ததும் பதறி, “என்ன ஆச்சு நிலா… ரொம்ப வலிக்குதா…?” என்று கேட்டு.. “சரி நீ காஃபியை குடி… நா டேப்லெட் கொண்டு வரேன்…” என்று சொல்ல…
ஆதியின் குரலைக்கேட்டதும் நிலாவுக்கு எங்கிருந்தோ மொத்த கோபமும் வர…
“நீங்க எதுக்கு எனக்கு காஃபி கொண்டு வந்து தறீங்க…? நா உங்க கிட்ட கேட்டனா… எனக்கு தலைவலிச்சா உங்களுக்கென்ன? இந்த அக்கறையை அந்த பொண்ணுட்டயே போய் காட்டுங்க…” என்று அவள் பொரிய ஆரம்பிக்க…
ஆதி வியந்தான்… இவள் என்ன பேசுகிறாள்…? நிலாவுக்கு இப்படியெல்லாம் கூட பேசத்தெரியுமா…?
“உங்களுக்கென்ன… உங்களை கேட்டனா…”
கடைசியில் ஏதோ, “அக்கறையை அந்த பொண்ணுட்டயே காட்டுங்க…” என்றாளே…
சட்டென்று தோன்ற…
“எந்த பொண்ணு…?” அவன் கேட்க…
நிலாவுக்கு அப்போதுதான் அவசரத்தில் வார்த்தையை விட்டது புரிந்தது…
“ஒண்ணும் இல்ல… இனி நீங்க எனக்காக அக்கறை பட வேண்டாம்…” அவசரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அந்த பெண் என்று ஏதோ சொன்னாள்… இவளுக்கு என்ன கோபம்… நான் எந்த பெண்ணிடம் அக்கறை காட்டினேன்… அவன் யோசித்துக்கொண்டே இருக்க…
சுமிக்கு போன் செய்து, “தலைவலி… half டே லீவ் சொல்ல போறேன்…” நிலா சொல்ல…
சுமி, “இரு நிலா நானும் சொல்லிட்டு உன்ன வீட்டுல விடுறேன்…” என்றாள்.
ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு இருவரும் கிளம்ப…
“லேட் நைட்ல மொபைல் ஏன்டி பாத்துட்டு இருக்க… பாரு இப்போ தலைவலி வந்திடுச்சு… வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு நிலா…” சுமி கூற.
“ஹ்ம்ம்…” என்றவள் சுமி மேலே சாய்ந்துகொண்டாள்…
வீடு வந்ததும் சுமி எழுப்ப இறங்கி உள்ளே சென்றாள்…
லக்ஷ்மி, “என்னம்மா சீக்கிரமே வந்துட்ட… முகம் ஏன் வாடி இருக்கு…” என்று கேட்க…
நிலா அமைதியாக நிற்க…
“தலைவலிக்குதுனு சொன்னா ஆன்ட்டி… அதான் half டேல வந்துட்டோம்…” சுமியே பதில் சொன்னாள்…
லக்ஷ்மிக்கு நிலாவின் முகமாற்றம் சரியாக படவில்லை…
“2 நாளா இப்படி தான் இருக்கா…” நினைத்தவர் சுமி கிளம்பியதும் நிலாவின் அறைக்கு செல்ல…
கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தாள்…
“என்னவோ டென்ஷன்ல தான் இருக்கா… என்னனு சொன்னா தான… ஒரே பிடிவாதம்…” நிலாவின் தலையை கோதிவிட்டு நெற்றியில் முத்தம் பதித்தார்.
அம்மாவை கட்டிக்கொண்டு நிலா தூங்கத்தொடங்கினாள்…
சுமி தன் அறைக்கு சென்றவள் மொபைலை எடுத்து பார்த்தாள்…
“எனக்கு கிளாஸ் கேன்சல் பண்ணிட்டாங்க… half டேல வந்துட்டேன்…” என்று மெஸேஜ் அனுப்ப…
“சரி வா வெளில போலாம்…” என்றான் அருண்.
“இவன்கிட்ட சொன்னதே வம்பா போச்சே” என்று நினைத்தவள், “போலாமே… ஆனா வீட்டுல வெளில விடமாட்டாங்க” என்றாள்.
“அப்றம் எப்படி…? ஒரு நாள் கட் அடிச்சிட்டு வா…” அவன் கூற…
“அதெல்லாம் முடியாது… நீ சொன்ன கனவே எனக்கு வரலயே…” என்றாள்.
“ஓகே ஓகே… இன்னிக்கி வரும்…” என்றான்.
“வராது…”
“வரும்…”
“பாப்போமா…”
“பாப்போம்…”
“உனக்கு வந்துச்சா மோகினி…” அவள் கேட்க.
“இல்லையே வெவே வெவே…” என்றான்.
“வரும் பக்கத்துல பாரு…” என்றாள்.
“இல்லையே இல்லையே…” அவன் கூற.
“நா இப்போதான் சொல்லி அனுப்பினேன்… 2 மினிட்ஸ்ல வரேன்னு சொல்லிருக்கு…” என்றவள் சிரித்தாள்.
“வரட்டும்…” என்று அவன் கூற…
“TCLல இருக்கறதுலயே அழகான பையன் கேபினுக்கு போன்னு இப்போ தான் சொல்லி இருக்கேன்…” என்றாள்.
அவன் சிரித்துவிட்டு, “ஜாலியா இருக்க போலருக்கு…” என்று கேட்க…
“ஆமா… உன்கூட பேச ஆரம்பிச்சதுல இருந்து…” டைப் செய்தவள் சிரித்துக்கொண்டே அனுப்பாமல் டெலிட் செய்தாள்.
“போர் அடிக்குது…” என்று அனுப்பினாள்.
“கிளம்பி வா…” என்று அவன் அனுப்ப…
“தோ வரேன்…”
“செப்பல் போட்டுட்டு வரேன்…”
“அய்யோ செப்பல காணோமே…”
“நாளைக்கு வரேன்…” என்றாள்.
“தியா… ப்ளீஸ்… சீரியஸா கேக்குறேன்… நாம மீட் பண்ணலாமா…” என்றான்.
சுமிக்கு இப்போது புதிதாக ஒரு பயம் வந்தது…
நேரில் பார்த்து நான் அவனை ஏமாற்றிவிட்டேன் என்று நினைத்துக்கொண்டால்…
அவனை இழக்கவோ அவனுடன் பேசாமல் இருக்கவோ தன்னால் முடியுமா…
இதற்கு மேலும் நித்யாவாக தொடரவேண்டாம்…
யோசித்தவள்…
“ஓகே… ஈவினிங் 6 மணிக்கு கோவில்ல மீட் பண்ணலாம்… லொகேஷன் சென்ட் பண்ணறேன்…” அவள் லொகேஷன் அனுப்ப…
அருண் ஆபிஸில் இருந்து கிளம்பியவன்… நேராக அவள் சொன்ன இடத்திற்கு வந்து காத்திருக்கலானான்…
அவனுக்கு முன்பே கோவிலுக்கு வந்தவள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..
சுமியை பார்த்தவன் ஒரு நிமிடம் கண்களை மூடி திறக்க…
சுமி நேராக அருணிடம் சென்று, “ஐ’ம் சோ சாரி அருண்… நா உன்ன கலாய்க்கலாம்னு தான் வந்தேன்… ஆனா அதை நான் பண்ணல… ஒரு பிரெண்டா lifelong உன்கூட வரணும்னு ஆசைப்படுறேன்…” அவள் வேகவேகமாக சொல்லிக்கொண்டு போக…
அருணுக்கு அது இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது…
அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவன் அவள் கண்களை பார்த்து, “பிரெண்டா தானா…?” என்றவன்…
“எனக்கு உன்ன தியாவா பிடிக்குதா சுமியா பிடிக்குதானுலாம் தெரியாது… ஆனா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்” அவன் கூற…
“எனக்கும்…” என்று சுமி புன்முறுவலுடன் கூற…
“தேங்க்ஸ் தியா… ஐயோ சுமி… புதுசா கூப்பிடும் போது confuse தான் ஆகும்… கோச்சிகாத சுமி…” அவன் கூற…
“சரி…” என்றவள் சிரிக்க.
“ஆனா நா பண்ணத நிலாகிட்ட மட்டும் சொல்லிடாத… ஓட்டியே கொன்னுடுவா…” என்று கண்களால் கெஞ்சினான்.
“கண்டிப்பா சொல்லுவேன்… உன் சேட்ட அப்டியே படிச்சி காட்டபோறேன்…” அவள் சொல்ல…
“நோ… ப்ளீஸ் டி… என் செல்லம்ல… நா உனக்கு குச்சிமுட்டாயும் குருவிரோட்டியும் வாங்கிதரேன்…” அவன் கொஞ்ச…
“யோசிக்கறேன்…” என்றாள் கண்களில் காதலுடன்.
சிரித்துகொண்டே இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
மீண்டும் வருவாள்…
Comments
0 comments