மீண்டும் நிலா
Episode – 16
Written by – Saipriya.A
காலையில் மிகவும் சோம்பலுடன் எழுந்த நிலா ஆபிஸ் கிளம்ப ஆரம்பித்தாள்.
“என்ன நிலா?? இன்னிக்கு லீவ் போடலாம்ல ஏன் ஆபிஸ் போற…?” கேட்டார் லக்ஷ்மி.
“வேலை இருக்குமா… நேத்தே half டே லீவ் போட்டுட்டேன்… இன்னிக்கி போய் தான் pending works முடிக்கணும்…” சொன்னவள் கிளம்பி ரெடியாக இருக்க…
சுமி ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கி கீழே வந்தாள்.
“எங்கே இருக்கான் இந்த லூசுபையன்…” அருணை தேடிக்கொண்டு வர அறைக்குள்ளிருந்து வந்த அருணை பார்க்காமல் முட்டிக்கொண்டாள்.
அருண் சுமியை பார்த்ததும் சிரிக்க ஆரம்பிக்க…
“அருண்… இப்போ எதுக்கு லூசு மாரி சிரிக்கற… யாராச்சும் பாக்க போறாங்க… கண்ட்ரோல்…” சுமி பல்லை கடித்துக்கொண்டு கூற…
“சரி நீ ஏன் எனக்கு காலைல மெஸேஜ் அனுப்பல…” அவன் கேட்க.
“ஹ்ம்ம்… ஏன் சாரால பண்ண முடியாதா… நித்யாக்கு மட்டும் பண்ணறல…” அவள் முறைத்தாள்.
“சரி சாரி… என் தப்பு தான்… மன்னிச்சிக்கோ…” அவன் கன்னத்தில் போட்டுக்கொள்ள.
சுமி புன்னகை பூத்தாள்.
ஆதி காலையில் இருந்து நிலாவை எப்படி சமாதானம் பண்ணுவது என்று யோசித்துக்கொண்டு இருக்க…
தன் அம்மா சக்தியின் குரல் கேட்டு அவன் யோசனை கலைந்தது.
“ஏன்டா இன்னும் அப்டியே உட்கார்ந்து இருக்க… டைம் ஆச்சே ஆபிஸ்கு… போய் குளி…” அம்மா சொல்ல.
எழுந்து குளிக்க சென்றான். சில்லென்ற தண்ணீர் ஷவரிலிருந்து வெளிப்பட மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான்.
“நிலானு பேர் வச்சிட்டு எவ்ளோ கூலா இருக்கணும்… ஹ்ம்ம்… இவளுக்கு என்ன தான் கோபம்னே தெரியல… எங்க இருந்து சமாதானம் பண்றது…”
வெளியே வந்து தலையை துவட்டிக்கொண்டு நிற்க…
“ஏண்டா அழுக்கு துணியை துவைக்க கூட நான் தான் வந்து எடுத்துட்டு போணுமா…? அநியாயம் பண்ற ஆதி… இரு இரு என் மருமக வரட்டும்…”
“இது என்னடா பீரோல போய் அழுக்கு துணி வச்சிருக்க…” சொல்லிக்கொண்டே அந்த கருநீலநிற சட்டையை ஆதியின் அம்மா பீரோவில் இருந்து எடுக்க…
ஆதி, “என்ன சட்ட…” திரும்பி பார்த்தவன் பதறிக்கொண்டு ஒரே எட்டில் அந்த சட்டையை அம்மா கையில் இருந்து வாங்கி, “ஐயோ… மா… இது அழுக்கு இல்லம்மா… டிசைன்… ஹிஹி…” என்று சிரித்து மழுப்ப…
“டேய்… உண்மையை சொல்லுடா… அது டிசைனா… சரி… இங்க குடு நானே பாக்குறேன்…” அம்மா கேட்க.
“மா… நானே உண்மையை சொல்லிடறேன்… அதுல இருக்க கைத்தடம் அவளோடது மா…” சொல்லிவிட்டு ஆதி மெதுவாக சிரிக்க…
“அவளோடதுனா… ஏய் என் மருமக யாருன்னு காட்டுடா…”
“ம்கும்… அட போம்மா… மருமாகளா… அவ எனக்கு இன்னும் பிரெண்டா கூட இருக்க மாட்டாறாலே…” ஆதி வருந்த…
“ஏண்டா…” அம்மா கேட்க நடந்த நிகழ்வுகளை சொன்னான்.
“நீ ஏதோ ஒரு பொண்ணுட்ட அக்கறை காமிச்சா அவ ஏன் கோவப்படணும்… புரிஞ்சிக்கடா… அவளுக்கு உன்மேல ஏதோ ஒண்ணு இருக்கு…” ஆதியின் அம்மா சொல்ல…
“அட… நா அப்படி யோசிக்கவே இல்லையே… ஆனா அவ என்மேல கோவமாகி இனி உன் அக்கறை வேணாம்னு சொன்னாலே…” ஆதி கூற.
“உன் கேள்விலேயே பதில் இருக்கே ஆதி… கோவமாகி தான் சொல்லிருக்கா… சரி உன்ன விட்டா இப்போதைக்கு நீ அந்த பொண்ண எனக்கு மருமாகளாக்க மாட்ட… உனக்கு அந்த பொண்ணு வீடு தெரியும்ல… வா நாம அவங்க அம்மாட்ட பேசிக்கலாம்…”
என்றார் சக்தி.
“நீ சொல்றதும் சரி தான் அம்மா… நா எது சொன்னாலும் அவ oppositeஆவே செய்வா… அதனால இவள்ட பேசி இனிமே சரிவராது… நா போய் கிளம்புறேன்…” ஆதி சொல்ல…
“சீக்கிரம் கிளம்புடா… இன்னிக்கி வியாழன்… நல்ல நாள் தான்… இன்னிக்கே பேசிடுவோம்…” என்றார்.
“மா… அப்பாட்ட சொல்லல…?” ஆதி கேட்க.
“அவர் பொண்ணு பாக்கிறதுக்கு வருவார்…” அவன் அம்மா பதிலளிக்க.
“ஸ்வீட் மாம்…” அம்மாவின் கன்னத்தை கிள்ளிவிட்டு ஆதி விரைவாக ரெடி ஆக சென்றான்.
நேரே கிளம்பி நிலா வீட்டுக்கு சென்றடைந்த ஆதியும் அவன் அம்மா சக்தியும் காலிங் பெல்லை அழுத்த…
சிரித்த முகத்துடன் வரவேற்ற லக்ஷ்மி, “வாங்க ஆதி தான… வாங்கம்மா…” என்று அவர்களை உள்ளே அழைத்து உட்கார வைக்க.
“எங்க ஆதிய உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…?” சக்தி கேட்க.
“நல்லாவே தெரியுங்க… நிலாவுக்கு நிறைய ஹெல்ப் லாம் பண்ணிருக்கார்னு சொல்லிருக்கா…”
“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி…” சக்தி கூற…
லக்ஷ்மி திகைத்துப்போய் பார்க்க…
“என் பையன் மனசுல உங்க பொண்ணு தான் இருக்கா… உங்களுக்கும் நிலாவுக்கும் சம்மதம்னா உங்க பொண்ண எங்க வீட்டுக்கு மருமகளாக்கிக்க ஆசைப்படுறேன்…” ஆதியின் அம்மா தொடர்ந்தார்.
அதற்குள் அருணும் அங்கே வந்துவிட…
“ஆபிஸ் போனதில் இருந்து எப்போ பாரு நிலா ஆதி பத்தி பேசிட்டு இருக்கா… அவ மனசுல ஆதி தான் இருக்கார்னு நெனைக்கிறேன்மா…” அருண் கூற…
“நீங்க சொல்லுங்கம்மா… உங்களுக்கு ஒகேன்னா…” சக்தி கேட்க.
லக்ஷ்மி, “என் நிலவோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்மா… அவளுக்கு பிடிச்ச பையன் எங்களுக்கு எப்டி பிடிக்காம போகும்… எங்களுக்கும் சம்மதம் தான்…” சொன்னார்.
“அப்போ நாங்க நாளைக்கு பொண்ணு பார்க்க வரோம்…” சக்தி கூற…
“ஆன்ட்டி… ஆனா இந்த விஷயம் உங்க பொண்ணுக்கு தெரிய வேணாம்… ப்ளீஸ்… அவ கண்டிப்பா வீம்புக்கு வேணாம்னு சொல்லுவா… எங்களுக்குக்குள்ள ஒரு சின்ன misunderstanding… அதான்…” ஆதி கேட்க.
“ஓகே ஆதி… நாங்க சொல்லல…” என்று சிரித்துக்கொண்டே லக்ஷ்மி சொல்ல.
“தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றான் ஆதி.
அம்மாவை வீட்டில் விட்டு அலுவலகம் கிளம்பினான் ஆதி…
காலையில் ஆதி லீவ் என்று கேள்விப்பட்ட நிலா கேன்டீனிற்கு லஞ்ச் சாப்பிட அனு மற்றும் ரகு வற்புறுத்தி அழைத்ததால் வந்து இருந்தாள்.
உணவு ஆர்டர் செய்து விட்டு காத்திருக்க ஆதி அந்நேரம் பார்த்து கேன்டீனில் நுழைந்தான்.
ரகு அவனை பார்த்துவிட்டு எழுந்து போனவன், “ஆதி சார்… எங்க half டே உங்களை காணோம்னு பார்த்தோம்…” என்று கூற.
ஆதி நிலாவை பார்த்துக்கொண்டே, “அம்மா காலையில பொண்ணு பார்க்க கூப்பிட்டு போய்ட்டாங்க…” என்று கூற.
நிலா அப்போதும் சலனமே இல்லாமல் உட்கார்ந்து இருக்க…
“இவ கல் நெஞ்ச காரி… கொஞ்சமாச்சும் கரையறாளா பாரு… ம்ஹும்” ஆதி மனதுக்குள் பேசிக்கொள்ள…
“One செகண்ட்… ஐ காட் அ கால்…” என்று எழுந்து அந்த இடத்தை விட்டு போய் விட்டாள்…
“ஹ்ம்ம்… என் காதல் உண்மையா இருந்தா… நீயும் அதை உணருவ நிலா…”
“ஓகே கைஸ்… you carry on…” என்று ஆதி நகர்ந்தான்.
“இவன் பொண்ணு பார்க்க போனா எனக்கென்ன…” நினைத்த நிலா…
அங்கிருந்து ஏன் எழுந்து வந்தாள் என்பதை ஏனோ யோசிக்க மறந்தாள்.
மீண்டும் வருவாள்…
Comments
0 comments